Monday 24 April 2017

தாவரத்தின் குரல் -- வேப்பமரம் (பாகம்-6)


Image result for neem tree images

"என்னை அறிவீரா?? -- வேப்பமரம்

நேற்று வேப்பெண்ணெய் பற்றி பார்த்தோம்.

மருத்துவ பயன்கள்:-

🌳வேம்பு கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது.

🌳கார்த்திகை மாதம் விடுகின்ற வேப்ப இலை  கொழுந்தை இருபத்தேழு நாட்கள் சாப்பிட்டு வர பாம்பு விடம்(விஷம்)  நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் (விஷம்) ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும்.

🌳வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.

🌳வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோய் குணமாகும்.

🌳வேம்பு இலை,வேப்பம் பூ குடல் புழுக்களைக் கொல்லும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும்.ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment