Friday 7 April 2017

தாவரத்தின் குரல் -- தீமை செய்யும் சீமைக் கருவேலம் (பாகம்-2)




Image result for karuvelam bad tree images


"என்னை அறிவீரா?? -- தீமை செய்யும் சீமைக் கருவேலம்

நேற்று சீமை கருவேல மரம் மற்றும் மறு பெயர்களை பார்த்தோம்.

சீமை கருவேல மரம் பாகங்கள்:-

இலை , முட்கள், பட்டை, மொக்கு, காய், பூக்கள் மற்றும் விதைகள் உள்ளன.

தன்மை:-

🌵இம்மரம் 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இது புளியமர இலைகளைப் போல் சிறு இலைகளையும், கருவேலமரத்தை ஒத்தும் காணப்படுகின்றன.

🌵இம்மர சல்லி வேர்கள் மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் மேலேயே தேங்க வைத்து விடுகிறது.

🌵இதன் வேர், நிலத்தில் ஆழச்சென்று நிலத்தடி நீரையும் உறிஞ்சக்கூடியது. இதன் வேர் (53 மீட்டர்) 175 அடி நீளம் வளரக்கூடியதென பதிவிடப்பட்டுள்ளது.

🌵இவை ஆழ வேர் மட்டுமில்லாமல் உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை தடைசெய்கிறது.

🌵எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளரும் தன்மை கொண்டவை.

🌵எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு.

 🌵மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது.

🌵ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது.

🌵எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு.

🌵இவை வாழும் இடத்தில் உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கிறது.

வரலாறு:-

🌵பயிர்களுக்கு வேலியாகவும் சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில்    காங்கிரஸ் ஆட்சியின் போது ஆஸ்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது

🌵இந்த அறுபது ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது.

 🌵இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்பட்டு வருகிறது.

 இதன் தீமைகளை பற்றி நாளை பார்ப்போம்.

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠







No comments:

Post a Comment