Monday 17 April 2017

தாவரத்தின் குரல் -- அரச மரம் (பாகம்-5)


Image result for arasamaram images

"என்னை அறிவீரா?? -- அரச மரம்

நேற்று பாகங்கள் மற்றும் பொருட்கள் பற்றி பார்த்தோம்.

மருத்துவ குணங்கள்:-

🌳அரசமரத்தின் இலைக் கொழுந்தை அரைத்து மோருடன் கரந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

🌳அரச இலைச் கொழுந்தைப் பசும் பாலில் இட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் குடிக்க சுரம் குணமாகும்.

🌳அரச இலை, மாவிலை, நாவல் இலை, அத்தி இலை இவற்றைச் சம பங்கு எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர பெண்களுக்க மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

🌳அரச மரத்தின் பழுப்பு இலைகளை எரி;த்துத் தூளாக்கி, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவிவலி, தீப்புண், அதனால் ஏற்பட்ட தழும்புகள் குணமாகும்.

🌳அரசமரக் கொழுந்து, ஆலங்கொழுந்து அத்திக்கொழுந்து இவற்றைச் சம அளவில் எடுத்து அரைத்து உட்கொண்டு வந்தால் மூலத்தில் ரத்தம் வடிதல் நிற்கும்.

🌳அரச விதை, ஆலம் விதை நம அளவு எடுத்து அரைத்து. அதைப் பாலில் கலந்து உண்ண ரத்த வாந்தி நிற்கும்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்

No comments:

Post a Comment