Friday 7 April 2017

தாவரத்தின் குரல் -- தீமை செய்யும் சீமைக் கருவேலம் (பாகம்-1)

Related image


"என்னை அறிவீரா?? --  தீமை செய்யும் சீமைக் கருவேலம்

🌵ஒவ்வொரு மண்ணும் அதற்கேற்ற மரபான மரம் உட்பட அனைத்தையும் கொண்டு இருக்கும்.

🌵தமிழர்கள் தங்களது நிலத்தை ஐந்து வகையாக் பிரித்து, அதை ஐந்திணைகள் என அழைத்து அதில் ஒவ்வொரு வகையிலும் வளரும் மரம், செடிகளை அறிந்து வைத்து செயல்பட்டார்கள்.

🌵பல மரங்களை அதன் பயன்பாட்டு முக்கியத்துவம் கருதி கடவுள் எனவும் கூறிக் கூட வணங்கினார்கள்.

🌵இயற்கையை அறிந்து, புரிந்து, இயற்கையோடு இணைந்து, இயற்கையையே கடவுளாக வணங்கும் நீண்ட நெடிய பாரம்பரியத்திற்கு சொந்தகாரர்கள் தமிழர்கள்.

🌵ஆனால் இன்று இந்த மண்ணிற்கு எந்த வகையிலும் பொருத்தப்பாடு இல்லாத ஒரு மரம், சீமைக் கருவேல மரம் நமது தலையில் திணிக்கப்பட்டு, தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது.

🌵சீமைக் கருவேலம் என்றும்வேலிக்காத்தான் என்றும் பரவலாக அறியப்படும் இது வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும்.

🌵 இதன் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா Prosopis juliflora என்பதாகும்.

🌵மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா போன்ற நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட இந்த நச்சு மரம் நமது நாட்டின் வளமான பகுதிகளை சீரழிக்க சில அந்நிய சக்திகளால் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

மறு பெயர்கள்:-

🌵தமிழ் நாட்டில்  சீமை கருவேலம், வேலிக்காத்தான், காட்டுக்கருவேல் மரம், சீமை உடை, சீமைக்கருவை, வேளிக்கருவை, டெல்லி முள், முட்செடி, காட்டுக் கருவல், லண்டன் முள், வேலிக்கருவல் என்று பல்வேறு வட்டார பெயர்கள் இதற்குண்டு.

🌵 தமிழ் நாட்டில் இயற்கையாக வளரும் கருவேலமரத்தையும் (Acacia nilotica) ஒத்து இருப்பதால் இவை  கருவ மரம் என்று அழைக்கப்படுகிறது.

 🌵ஆனால் அடிப்படையில் இவை இரண்டும் வெவ்வேறு மரங்களாகும்.

நாளை இதன் தன்மைகள் மற்றும் வரலாறு பற்றி பார்ப்போம்.

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠




No comments:

Post a Comment