Wednesday 12 April 2017

தாவரத்தின் குரல் -- நன்மை தரும் கருவேலமரம் (பாகம்-5)


Image result for naatu karuvelam tree images

"என்னை அறிவீரா?? -- நன்மை தரும் கருவேலமரம்

தமிழர்களும் மரங்களும்:-

🌵ஒவ்வொரு மண்ணும் அதற்கேற்ற மரபான மரம் உட்பட அனைத்தையும் கொண்டு இருக்கும்.

 🌵தமிழர்கள் தங்களது நிலத்தை ஐந்து வகையாக் பிரித்து, அதை ஐந்திணைகள் என அழைத்து அதில் ஒவ்வொரு வகையிலும் வளரும் மரம், செடிகளை அறிந்து வைத்து செயல்பட்டார்கள்.

🌵பல மரங்களை அதன் பயன்பாட்டு முக்கியத்துவம் கருதி கடவுள் எனவும் கூறிக் கூட வணங்கினார்கள்.

🌵இயற்கையை அறிந்து, புரிந்து, இயற்கையோடு இணைந்து, இயற்கையையே கடவுளாக வணங்கும் நீண்ட நெடிய பாரம்பரியத்திற்கு சொந்தகாரர்கள் தமிழர்கள்.

🌵ஆனால் இன்று இந்த மண்ணிற்கு எந்த வகையிலும் பொருத்தப்பாடு இல்லாத ஒரு மரம், சீமைக் கருவேல மரம் நமது தலையில் திணிக்கப்பட்டு, தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது.

நாட்டு கருவேல மரத்தின் அழிவு:-

🌵"நாட்டு கருவேல () கருவேல மரம் மற்றும் வெள்வேலமரம்வேலமரம் என்று சொன்னால் இந்த இரண்டைத்தான் குறிக்கும்.

🌵ஆனால் இந்த இரண்டின் மானத்தைக் கப்பலேற்றுவதற்காகவே வந்ததுதான் விஷ்முள்மரம் என்று சொல்லக்கூடிய வேலிமுள்மரம். சில இடங்களில் மட்டும் இதை அறியாமல் வேலிக் கருவை என்பார்கள்

🌵இது குறைந்த பயனும் நிறையத் தீய குணங்களும் கொண்ட பயனற்ற மரவகை ஆகும்.

🌵இது யாரும் வைத்து வளர்க்காமலும் வளர்த்தும் இரண்டுவிதமாகப் பெருகி இப்போது அழிக்கமுடியாத அளவு இடம் கிடைத்த பக்கமெல்லாம்  வனம்போல் வளர்கிறது.

🌵 குதிரையைப்போல் தோற்றமிருப்பதால்  யாரும் கழுதையைக் குதிரை சொல்வதில்லை.

🌵ஆனால் அப்படிப்பட்ட ஒற்றுமைகூட இல்லாத நிலையில் படித்த சில அறிவுஜீவிகளின் அறியாமையால் விஷமுள் மரத்தைக் கருவேலமரம் என்று பெயரும்வைத்து அதை ஒழித்துக்கட்டவேண்டும் என்று பெரிய பிரச்சாரமும் செய்துவிட்டார்கள்

🌵அதற்கு முகநூலில் கிடைத்த வரவேற்பு அளவே இல்லை. மறுப்புக் குரல் ஈடுபடவே இல்லை!

🌵இனியாவது ஒருவிஷயத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு ஆதரிக்க அல்லது மறுக்க வேண்டும்

🌵இல்லாவிட்டால் படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

நாட்டு கருவேல மரத்தை பற்றி முழுமையாக பார்த்தோம்..

நாளை சீமை கருவேல மரத்தை பற்றி பார்ப்போம்.

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment