Thursday 4 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-5)


Related image


"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

நேற்று புளிய மரத்தின் பயன்கள் பற்றி பார்த்தோம்.

மருத்துவ பயன்கள்:-

"ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்"

💊என்றொரு பழமொழி சொல்வார்கள். அதன் உண்மையான அர்த்தம் வேறு.

💊ஆ-நெய் என்றால் பசு நெய், பூ-நெய் என்றால் தேன். 40 வயதுக்குள் பசுநெய் சாப்பிட வேண்டும்... அதற்கு மேல் தேன் சாப்பிட வேண்டும்.

💊 ஆகவேதான் ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும் என்றார்கள்.

💊 பசுநெய் போலவே புளியையும் 40 வயதுக்குள் இளமைத் துடிப்போடு இருக்கும் காலகட்டத்தில்தான் சாப்பிட வேண்டும்.

💊இள வயதினருக்கு புளி அவசியம் தேவை. சரியான அளவில் புளியை எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆண்மை வீறு கொண்டிருக்கும்.

💊 இப்படியாக பல நன்மைகள் புளியில் இருந்தாலும், அதை அளவாகவும் முறையாகவும் பயன்படுத்தவில்லை என்றால் நேரெதிர் தீங்குகளுக்கு ஆளாக நேரிடும்.

💊புளி என்பது அமிலத்தன்மை உடையது என்பதால் ரத்தத்தில் உள்ள அமில காரத்தன்மையை சமநிலைப்படுத்த வேண்டி காரத்தன்மையுடைய தண்ணீர் நிறைய குடிக்க வேண்டி வரும்.

💊இதன் காரணமாகத்தான் புளியோதரை, பிரியாணி ஆகியவற்றை சாப்பிடும்போது தண்ணீர் நிறைய குடிக்கிறோம்.

💊 அப்படி தண்ணீர் குடிக்காமல் விடும்போது உடலில் உள்ள நீர் உறிஞ்சப் பட்டு மலச்சிக்கல் ஏற்படும். இது நாளடைவில் மூலத்தை ஏற்படுத்தவும் கூடும்.

புளிய மரத்தின் பாகங்களில் உள்ள மருத்துவ பயன்கள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment