Monday 1 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-1)


Related image


"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

🌳புளி நாம் உபயோகிக்கும் புளியைத் தரும் புளியமரம் முதன் முதலாக ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டது.

🌳 ஆனால், தொன்று தொட்டு இந்தியாவில் உபயோகப்பட்டு வருவதால் இந்தியாவிலேயே தோன்றியதாக, கருதப்படுகிறது.

🌳 புளியமரம் பெரியதாக வளரும் மரங்களில் ஒன்று.

🌳புளிய மரம் பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். குடும்பம் சிசால்பினியேசி) (Caesalpinioidaeae).

🌳 இம்மரத்தின் தாவரவியல் பெயர் டேமரிண்டஸ் இண்டிகா (Tamarindus indica L.) என்பதாகும்.

🌳தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் பரவலாக காணப்படும் புளியமரங்கள் நெடுஞ்சாலை ஓரங்களில் ஓங்கி வளர்ந்து நிழல் தருகின்றன.

🌳புளியமரத்தை வடமொழியில் ‘திந்திரினி‘ என்று அழைப்பார்கள்.

🌳 வனம் என்பது காடு. புளியமரக்காடுகள் நிறைந்த இடம் ‘திந்திரினிவனம்‘ எனப்படும்.

🌳தமிழ்நாட்டில் உள்ள திண்டிவனத்திற்கு, அவ்வாறு பெயர் ஏற்படக் காரணம், அங்கு முன்பு ஏராளமாக காணப்பட்ட புளியமரங்கள்தான்.

🌳புளியமரம் இதற்கு அமிலம், சிந்தூரம், சிந்தகம், சஞ்சீவகரணி போன்ற பெயர்களும் உண்டு.

 புளிய மரத்தின் தன்மைகள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment