Tuesday 2 May 2017

தாவரத்தின் குரல் -- புளிய மரம் (பாகம்-2)


Image result for tamarind tree images


"என்னை அறிவீரா?? -- புளிய மரம்

தன்மைகள்:-

🌳புளியமரம் பெரியதாக வளரும் மரங்களில் ஒன்று.

🌳பசுமையான மரம் 80 அடி உயரம் வரை வளரும் அதனை சுற்றி 30-35 அடி விட்டத்துக்கு பரவும் கிளைகளுடைய பெரிய மரம்.

🌳இம்மரம் உறுதியானது. இதன் பக்கக் கிளைகள் பரவிக் காணப்படும். இவை எளிதில் முறிவதில்லை.

🌳புளியமரம் பெரும்பாலும் நட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னரே காய்த்துப் பயன்தரத் தொடங்குகிறது. இது 100 ஆண்டுகளுக்கு மேலும் வளரும்.

🌳அதிகமான கவனிப்பும் தேவையில்லை. சிறு செடிகளாக இருக்கும் போது உரங்கள் தேவை. மெதுவாக வளரும் புளியமரம் அதிக ஆயுள் உள்ளது.

🌳உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு வளரும் புளியமரம், குளிரைத் தாங்காது. ஆனால் கடற்கரை ஓரங்களில் கூட வளரும்.

🌳வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ வரை போதுமானது.

இரகங்கள்:-

🌳பிகேஎம். 1, உரிகம், தும்கூர், ஹாசனூர், ப்ரதிஸ்தான், டீ. டி எஸ் 1, யோகேஸ்வரி

புளிய மரத்தின் பாகங்கள்  பற்றி நாளைக்கு பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.

Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment