Friday 31 March 2017

தாவரத்தின் குரல் -- பனை மரம் (பாகம்-2)



Image result for palm tree images



"என்னை அறிவீரா??  --  பனை மரம் 

வணக்கம் நேற்று பனை மரம் வளரும் விதம் மற்றும் அதன் தன்மையை பார்த்தோம்.

பயன் தரும் பாகங்கள்:-

🌴 நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

நொங்கு:-

 🌴இந்த பனம்பழமானது இளம் காய்களாக இருக்கையில் நுங்கு என அழைக்கப்படுகிறது.

🌴 நுங்குக்கு என ஒரு நுணுப்பமான பருவம் உள்ளது.

🌴இந்தப் பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும்.

🌴இந்தப் பருவம் தாண்டி சற்று முற்றி விட்டால் இதன் சுவை குன்றி விடும். நன்கு முற்றி விட்ட பின்

🌴இதனை சீக்காய் என்பர். சீக்காய் திரவநிலை குறைந்து இறுக்கமாகக் காணப்படும்

பனைப்பால்:-

🌴 பனைப்பால் (பதனீர்என்பது  பனை கித்துல் முதலானவற்றின் பூம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் திரவம் ஆகும்

🌴சேகரிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே இயற்கையிலுள்ள வளிமண்டல  மதுவத்தினால்     நொதித்தலடைந்து கள்ளாக மாறும்.

 🌴இதனைத் தடுப்பதற்காக சேகரிக்கும் குடுவையில் சுண்ணாம்பு பூசப்பட்டு பதனீர் நொதிக்காமல் காக்கப்படும்.

🌴பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும்.

🌴இதையே சிறந்த சுவையான சத்தான குடிநீராகும்.

🌴 ''பனம் பால், தாய்ப் பாலுக்கு நிகரானது.

பனை மரத்தின் பாகங்கள் பனை பழம், பனைக் கிழங்கு பற்றி நாளைக்கு பார்ப்போம்.

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment