Friday 31 March 2017

தாவரத்தின் குரல் -- பனை மரம் (பாகம்-2)



Image result for palm tree images



"என்னை அறிவீரா??  --  பனை மரம் 

வணக்கம் நேற்று பனை மரம் வளரும் விதம் மற்றும் அதன் தன்மையை பார்த்தோம்.

பயன் தரும் பாகங்கள்:-

🌴 நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

நொங்கு:-

 🌴இந்த பனம்பழமானது இளம் காய்களாக இருக்கையில் நுங்கு என அழைக்கப்படுகிறது.

🌴 நுங்குக்கு என ஒரு நுணுப்பமான பருவம் உள்ளது.

🌴இந்தப் பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும்.

🌴இந்தப் பருவம் தாண்டி சற்று முற்றி விட்டால் இதன் சுவை குன்றி விடும். நன்கு முற்றி விட்ட பின்

🌴இதனை சீக்காய் என்பர். சீக்காய் திரவநிலை குறைந்து இறுக்கமாகக் காணப்படும்

பனைப்பால்:-

🌴 பனைப்பால் (பதனீர்என்பது  பனை கித்துல் முதலானவற்றின் பூம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் திரவம் ஆகும்

🌴சேகரிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே இயற்கையிலுள்ள வளிமண்டல  மதுவத்தினால்     நொதித்தலடைந்து கள்ளாக மாறும்.

 🌴இதனைத் தடுப்பதற்காக சேகரிக்கும் குடுவையில் சுண்ணாம்பு பூசப்பட்டு பதனீர் நொதிக்காமல் காக்கப்படும்.

🌴பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும்.

🌴இதையே சிறந்த சுவையான சத்தான குடிநீராகும்.

🌴 ''பனம் பால், தாய்ப் பாலுக்கு நிகரானது.

பனை மரத்தின் பாகங்கள் பனை பழம், பனைக் கிழங்கு பற்றி நாளைக்கு பார்ப்போம்.

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠

தாவரத்தின் குரல் -- பனை மரம் (பாகம்-1)



Image result for Palm tree



என்னை அறிவீரா??? -- பனை மரம்

இது தமிழ் நாட்டின் மாநில மரம்.

உலகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி.
 தமிழ் மொழியின் எழுத்துகள் முதன் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான்.

பனைமரம் தான் தமிழரின் அடையாளம்.

🌴 மலேசியா, ஈழம், மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா, தமிழகம் என தமிழர் வளர்ந்த இடங்களில் எல்லாம் பனைமரமும் வளர்ந்தது.

🌴 தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமை கொண்டது பனைமரம்!

🌴பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.

 🌴இளம் பனைகள்  "வடலி" என்று அழைக்கப்படுகின்றன.

🌴பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை.

🌴தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும்.

🌴வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை.

🌴 இதனாலேயே கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரமான கற்பகதருவுக்கு ஒப்பிட்டு "பூலோகத்து கல்பகதரு" என்றார்கள் நம் முன்னோர்கள்.

🌴மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கையான அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம், கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர்.

🌴 ''2004-ல் சுனாமி வந்தபோது கடற்கரை ஓரம் இருந்த தென்னை உள்ளிட்ட பெரிய மரங்கள் எல்லாம்கூட வேரோடு பெயர்ந்து வீழ்ந்துபோயின. ஆனால், ஒரு பனை மரம்கூட விழவில்லை.

 🌴கடற்கரை ஓரங்களில் நிறையப் பனை மரங்களை நட்டாலே போதும். சுனாமி போன்ற பேராபத்துகள் வந்தால், மிகப் பெரிய அரணாக பனை மரங்கள் இருக்கும்.


🌴பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன.

🌴 பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம்.

🌴பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்கிறது.

🌴அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனைகளை அடையாளம் கண்டறியமுடியும்.

“குரும்பை யான் பனை ஈன்குலை ஒத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப் பெரும்புகளையுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவோர் வினை வீடே!’’

- என்று இறுதியாக திருஞானசம்பந்தர் பாடலில் ஆண் பனை, பெண் பனையாகி குரும்பைகளாக  காய்த்துத் தொடங்குகின்றன என்று விளக்கியுள்ளார்.

பனை மரத்தின் பாகம், பயன்கள், மருத்துவ குணங்களை நாளைக்கு பார்ப்போம்.

நன்றி

இந்த தகவல்கள் சில புத்தகம், விக்கிப் பீடியா மற்றும் சில செய்தித்தாள்களில் இருந்து எடுக்கப் பட்டது.

#த.முகேஷ்.

Thursday 30 March 2017

ஒரு சிறு கேள்வியோடு...


அனைவருக்கும் வணக்கம்

ஒரு சிறு கேள்வியோடு இப்பதிவினை துவங்கிட எண்ணுகிறேன், கேள்வி மிக எளிது, தமக்கு தெரிந்த ஒரு 30 தாவரங்களின் பெயர்கள் மற்றும் அதன் இயல்பினை கூற முடியுமா?

என்னுடைய பதில் தெரியாது. உங்களுக்கு!!!


 ஏனெனில் நாம் எல்லோருக்கும் இயற்கை,மரம் மற்றும் செடிகள் பிடிக்கும் ஆனால் அதை பற்றி தெரிந்து கொண்டது  என்னமோ கொஞ்சம் தான்..

இப்படி நம்மை சுற்றியுள்ள  சிறு சிறு  தாவரங்களின் பெயர்களே தெரியவில்லை என்றால் இதில்  நாம் எப்படி இயற்கையையும் விவசாயத்தையும் காப்பாற்ற போகிறோம்!!?

இப்பொழுதே பாதி செடி மற்றும் மரங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப் பட்டுள்ளது.

 இதை நான் எப்படி பாதுகாக்க போகிறேன் என்று எனக்குள்  கேள்வி எழுந்தது. அதற்கு முதலில் நான் அது என்ன மரம்?  அதன் தன்மை என்ன?   அதன் பயன்கள்? போன்றவற்றை தெரிந்து  கொள்ள வேண்டும்... இதை நான் மட்டும் தெரிந்து கொண்டு எந்த  பயனும் இல்லை. இதை அனைவருக்கும் தெரியப் படுத்த விரும்புகிறேன்...  இதை எப்படி எடுத்து சென்று சேர்ப்பது என்று யோசித்த போது இதை ஒரு பதிவாக செய்யலாம் என்று முடிவு செய்தேன்.

"என்னை அறிவீரா???
(தாவரத்தின் குரல்)"

 என்ற தலைப்பில்  தினம் ஒரு மரம் விதம் ஒரு பதிப்பை பதிவு செய்ய உள்ளேன்....

இதில் என்ன இருக்கு  இது தான் எனக்கு தெரியுமே என்று உங்கள் மனதில் நினைத்தால் ஒரு ஆய்வு செய்து பாருங்களேன். நீங்கள் தெருவில் நடந்து செல்லுங்கள் அங்கு என்ன செடி உள்ளது? என்ன மரம் உள்ளது பார்த்து அதில் எத்தனை செடி மற்றும் மரங்களின் பெயர்கள்,பயன்கள்  தெரியும் என்று சிந்தித்து பாருங்கள்... முடிவு என்னவென்று உங்களுக்கு தெரியும்.!!!!


நன்றி : சதீஷ் (சச்சு) மற்றும் பாலமுருகன் ராமமூர்த்தி அண்ணா அவர்களுக்கு.

# த.முகேஷ்.

குறிப்பு :
                இதை பற்றி உங்கள் கருத்தை கேட்க விரும்புகிறேன்...